அவித்தாவ பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

பெந்தர ஆற்றின் அவித்தாவ பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை கடற்படை கடந்த வாரம் அகற்றி நீர் செல்வதுக்கான தடைகளை நீக்கியுள்ளது.

கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணத்தினால் பெந்தர ஆற்று நீரில் வந்த பெரிய மூங்கில் புதர்கள், பதிவுகள் மற்றும் குப்பைகள் பாலத்தில் சிக்கி நீர் ஓட்டத்தைத் தடுத்ததுடன் பாலத்தில் சிக்கி இருந்த மூங்கில் புதர்கள் உட்பட கழிவுகள் அகற்றும் பணிகள் தென் கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி இந்த நடவடிக்கை மூலம் நீர் செல்வதுக்கான தடைகளை நீக்கப்பட்டுள்ளது.