“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 07 அன்று 1630 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

MT New Diamond எரிபொருள் கப்பலில் ஏற்பட்ட தீ நேற்றைய தினம் சுமார் 1500 மணியளவில் பேரழிவு மேலாண்மை குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் கப்பலின் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களினால் தீ மீண்டும் வருவதைத் தடுக்க இரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி பேரழிவு மேலாண்மை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், சங்கமங்கந்த பிரதேசத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ள கடல் பகுதியில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக மற்றும் அதிக உஷ்ணத்துடன் கப்பல் இருந்த நிலையில் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளது.

மேலும், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் பிற பங்குதாரர்களின் கப்பல்கள், விமானங்கள் மற்றும் டக் படகுகள் இணைந்து மீண்டும் ஏற்பட்ட இந்த தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.