இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹொல்கர் சியுபட் (Holger Seubert) அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை இன்று (2021 நவம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹொல்கர் சியுபட் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி ஆகியோர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து சுமுகமாக கலந்துரையாடினர். இந் நிகழ்வுக்காக ஜேர்மன் வர்த்தக சம்மேளனத்தின் இலங்கைக்கான தூதுவர் என்ரியஸ் ஹர்கன்ரொக்தர் (Andreas Hergenrocther) அவர்களும் கலந்துகொண்டார்.

மேலும், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி ஜேர்மன் தூதுவருக்கு நினைவுச் சின்னத்தையும் வழங்கி வைத்தார்.