போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் பற்றிய பாடநெறிகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை நடத்தும் கடற்படையினர்களுக்கு திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பாடநெறிகளின் (Counter Narcotics Boarding Officer Course/ Advanced Boarding Officer Course) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2021 செப்டம்பர் 22 அன்று கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ்வின் தலைமையில் திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

25 Sep 2021