ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன 2021 ஜூலை 20 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன வட மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பணியாற்றினார். ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வட மத்திய கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டதுடன் வட மத்திய கடற்படை கட்டளையின் முன்னால் தளபதி ரியர் அட்மிரல் சஞ்ஜீவ டயஸ் வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து நியமனம் தொடர்பான கடமைகளையும் பொறுப்புகளையும் ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.

கடற்படை அதிகாரிகள் குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் சஞ்ஜீவ டயஸ்வுக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து பாரம்பரிய கடற்படை வணக்கத்துடன் விடைபெற்றனர்.