இலங்கை கடற்படையால் புதிய சுழியோடுதல் சாதனை

நீருக்கடியில் சுழியோடுதல் செய்வது ஒரு அற்புதமான அனுபவம் என்றாலும், சுழியோடுதல் ஒரு ஆபத்தான முயற்சியாகும். இந்த அபாயங்களுக்கு சவாலாக திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் யானை தீவுக்கு அருகில் ஆழ்கடலில் 100 மீட்டர் ஆழத்துக்கு சுழியோடி 2021 ஜூலை 17 ஆம் திகதி கட்டளை சுழியோடி அதிகாரி (கிழக்கு கடற்படை கட்டளை) கொமாண்டர் நிஷாந்த பாலசூரிய மற்றும் அவரது உதவியாலர் கடற்படை வீரர் (சுழியோடி) டப்டப்என்பி சந்தருவன் ஆகியோர் புதிய சாதனையொன்றை படைத்தனர். கடற்படை வரலாற்றில் இத்தகைய ஆழத்துக்கு சுழியோடிய முதல் நபர்களாக இவர்கள் வரலாற்றுக்கு சேர்ந்தனர்.

19 Jul 2021

கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரயவில் திறந்து வைக்கப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக, வட மத்திய மாகாணத்தின் துணைத் தலைமைத் தலைவரான புனிதபாத பன்வில குனரத்ன நாயக்க தேரரின் வேண்டுகோளின் படி, பண்டுகலம சிரி சம்புத்த விஹாரயவுக்கு இணைந்த ரொடவெவ,எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரய வளாகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவியால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2021 ஜூலை 17 அன்று திறந்து வைக்கப்பட்டன.

19 Jul 2021