241 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 377 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 241 ஆம் ஆட்சேர்ப்பின் 377 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2021 மார்ச் 27 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

இந்நிகழ்விற்கு கடற்படை பணிப்பாளர் நாயகம் பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

அதன் படி 241 வது ஆட்சேர்ப்பில் சிறந்த பயிட்சியாளருக்கான விருதை கடற்படை வீரர் ஆர்.என்.என்.டப் ஜயதிலக பெற்றுள்ளார். சகல பாடங்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை கடற்படை வீரர் டீ.எம்.என்.டப் திஸாநாயக்க பெற்றுள்ளார். மேலும், கடற்படை வீரர் பீ.எம்.என்.கே பஸ்நாயக்க சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றுள்ளதுடன் எல்.எம்.என்.எஸ் பன்டார சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்றுள்ளார். 241 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக “தாதுசேன” பிரிவு விருது பெற்றுள்ளது. மேலும் 241 வது ஆட்சேர்ப்பின் வீர்ர்களுடைய கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் மற்றும் கடற்படை கலாசார பிரிவினரால் சமர்பிக்கப்பட்ட கலாசார நிகழ்ச்சியின் பின் குறத்த வெளியேறல் அணிவகுப்பு நிரைவடைந்தது.

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட, இந்த வெளியேறல் அணிவகுப்புக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர், அனைத்து மதகுருமார்கள், வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சன்ஜிவ டயஸ், இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமடோர் எம்.எஸ்.கே மஹவத்த உட்பட, கடற்படையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படையினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் கலந்துக்கொண்டனர்.