N95 முகமூடிகளை கிருமிநாசினி செய்யும் இயந்திரமொன்று கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்பட்ட N95 முகமூடிகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான கிருமிநாசினி இயந்திரத்தை, காலி, கராபிட்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வழங்கும் நிகழ்வு 2020 டிசம்பர் 16 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் இடம்பெற்றது.

19 Dec 2020

கடற்படையால் கட்டப்பட்ட மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

சிறுநீரக நோயை நாட்டிலிருந்து அகற்றுவதற்கான தேசிய முயற்சில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி இந்த சமூக பொறுப்புணர்வு முயற்சியின் மற்றொரு திட்டமாக, அம்பாரை ஹுலன்னுகே பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 787 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் 2020 டிசம்பர் 16 ஆம் திகதி பொது மக்களின் பயன்பாட்டிற்காக கடற்படையால் திறந்து வைக்கப்பட்டது.

19 Dec 2020