ரியர் அட்மிரல் லலித் திஸாநாயக்க கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ஏறக்குறைய 34 ஆண்டுகால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் லலித் திஸாநாயக்க இன்று (2020 அக்டோபர் 08) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர் நாயகர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் கடற்படைக்கு சேர்ந்த ரியர் அட்மிரல் லலித் திஸாநாயக்க, தனது பதவி காலத்தில் கடற்படை நல இயக்குநர், தெற்கு கடற்படை கட்டளையின் துணை தளபதி, இயக்குனர் கடற்படை ஆயுதங்கள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் முதன்மை பயிற்றுவிப்பாளர், நிர்வாக பணிப்பாளர் நாயகம் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளை தளபதி போன்ற மூத்த பதவிகளை வகித்துள்ளார்.