இலங்கையில் ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ககு புக்கோரா, (Gaku Fukaura) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னவை 2020 ஜூலை 30 அன்று சந்தித்தார்.

இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கடற்படைத் தளபதியுடன் நல்லுறவு கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் இலங்கையில் ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் காகு புக்கோரா ஆகியோருக்கு இடையே நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொள்ளப்பட்டன.