சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் கடற்படையினரால் கைது

கற்பிட்டி, ஜனசவிபுர கடல் பகுதியில் மற்றும் திருகோணமலை பாவுல்துடுவ பகுதிக்கு அப்பால் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் 2020 ஜூன் 29 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜூன் 29 ஆம் திகதி கற்பிட்டி, ஜனசவிபுர பகுதிக்கு அப்பால் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் பொது ஒரே பதிவு எண்ணைப் பதிவு செய்யப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளுடன் 05 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை விர்ர்கள் அதே நாளில் திருகோணமலை பாவுல்துடுவ பகுதிக்கு அப்பால் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 நபர்கள், இரண்டு படகுகள், ஒரு தடைசெய்யப்பட்ட வலை மற்றும் பிடிக்கப்பட்ட 12 கிலோ கிராம் மீன் பறிமுதல் செய்தனர்.

அதன்படி, இந்த நடவடிக்கைகள் மூலம் 13 மீனவர்கள், ஒரு மீன்பிடி வலை, பிடிக்கப்பட்ட 12 கிலோகிராம் மீன்கள் மற்றும் நான்கு (04) மீன்பிடிக் படகுகள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 22 முதல் 44 வயதுக்குட்பட்ட கற்பிட்டி மற்றும் முத்தூர் பகுதிகளில் வசிப்பவர்கள் என கண்டறியப்பட்டன. பின்னர் சந்தேக நபர்கள், டிங்கி படகுகள், மீன்பிடி வலை, பிடிக்கப்பட்ட மீன், மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் கற்பிட்டி மீன்வள இயக்குநரிடம் மற்றும் திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.