கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல முகமூடிகள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான முகமூடிகள் இன்று (2020 ஏப்ரல் 30) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி கொரியாவின் பூசான், கடல் மற்றும் பெருங்கடல் பல்கலைக்கழக (Korea Maritime and Ocean University, Busan, Korea) பேராசிரியர் யங்-ஹோ லீ (Young- Ho Lee) அவருடைய நிதியுதவியுடன் டாக்டர் பிரசன்ன குணவர்தன மற்றும் கணினி பொறியியல் பட்டம் வேட்பாளர் கேஷர வீரசிங்க. ஆகியோர் பேராதெனிய பல்கலைக்கழக பொறியியல் பீடத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் பாதுகாப்பான முகமூடிகள் இன்று (2020 ஏப்ரல் 30) கடற்படைக்கு வழங்கப்பட்டன.

கடற்படையின் தலைமைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை சார்பாக இந்த பொருட்களை ஏற்றுக்கொண்டதுடன் வழங்கப்பட்ட இந்த நன்கொடைகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட டாக்டர் பிரசன்ன குணவர்தன, கேஷர வீரசிங்க மற்றும் பெரதெனிய பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.