கொரோனா பரவுவதைத் தடுக்க 20000 ம் பாதுகாப்பு கையுறைகள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படையின் பங்களிப்புக்கு ஆதரவாக, லலான் ரப்பர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (Lalan Rubbers (Pvt) Ltd) இன்று (2020 மார்ச் 30) பல சுகாதார உபகரணங்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து நன்கொடையாக வழங்கியது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் கீழ் கடற்படை பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த திட்டங்களுக்காக நிதி மற்றும் பொருட்கள் உதவிகளை வழங்குவதன் மூலம் மாநில மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதரிக்கின்றன. அதன்படி, லலான் ரப்பர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் 20,000 பாதுகாப்பு கையுறைகளை கடற்படைத் தளபதியிடம் இன்று (2020 மார்ச் 30) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ஒப்படைத்தது. இந்த நிகழ்வில் லலான் ரப்பர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர். மேலும் நாட்டில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படையின் தொடர்ச்சியான முயற்சிகளை அவர்கள் மிகவும் பாராட்டினர்.

மேலும், இந்த நன்கொடைகள் கடற்படைக்கு வழங்குவது தொடர்பாக கடற்படைத் தளபதி லலான் ரப்பர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.