சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 08 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 08 பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு 2020 ஜனவரி 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் குறித்து இலங்கை கடற்படை கண்காணித்து வருகிறது. அதன் படி இலங்கை கடற்படைவடக்கு கடற்படை கட்டளையின் மேற்கொண்ட வழக்கமான ரோந்துப் பணியின் போது முல்லைதிவில் இருந்து எட்டு (08) கடல் மைல்கள் கிழக்கில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 08 இந்திய மினவர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த படகு மற்றும் மினவர்கள் திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி மீன்வள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.