சட்டவிரோத மீன்பிடி வலைகள் கொண்ட இரண்டு நபர்களை கடற்படையால் கைது

2020 ஜனவரி 30, ஆம் திகதி, கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து எராவூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இரண்டு (02) நபர்களை கைது செய்தன.

சட்டவிரோத மீன்பிடி முறைகளால் கடல் சூழலுக்கு ஏற்படுகின்ற சேதங்கள் தடுக்க இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வவுனதிவு பொலிஸ் சிறப்பு படையுடன் இனைந்து நடத்திய சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு கடையை சோதனை செய்யப்பட்டது. அங்கு விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 தடைசெய்யப்பட்ட வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடையில் இருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்கள் 20 மற்றும் 30 வயதுடைய எராவூர் பகுதியில் வசிப்பவர்கள் என கண்டறியப்பட்டது./p>

சந்தேக நபர்களுடன் கைது செய்யப்பட்ட வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு தேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இதுபோன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் நபர்களைத் கைது செய்ய கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.