இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் அல்லபிட்டி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம், யாழ்ப்பாணம், அல்லபிட்டி என்ற பகுதியில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டன. அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ஒரு வீட்டில் கேரள கஞ்சா பெரிய அளவு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி வீட்டில் இருந்த சந்தேகநபர்கள் இருவரையும் கடற்படை கைது செய்துள்ளது, மேலும் விசாரணையில் அவர்கள் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் அப்பகுதியில் வசிக்கின்ற 33 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையிலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பதில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.