கடற்படை நடவடிக்கைகளின் போது மேலும் 854.1 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினர் நவம்பர் 29 மற்றும் 30 திகதிகளில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது 854.1 கிலோகிராம் புகையிலை மீட்டனர்.

முல்லைத்தீவு துனுக்காயி பகுதியில் 2019 நவம்பர் 29 ஆம் திகதி கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான 6 பொதிகள் கண்கானிக்கப்பட்டன, அதில் 234.1 கிலோகிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த பிடி இலைகளை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2019 நவம்பர் 30 ஆம் திகதி அதிகாலையில், மன்னார் ஓலுத்துடுவாய் பகுதிக்கு அருகிலுள்ள கடற்கரையில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது கரைக்கு அருகிலுள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 620 கிலோகிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.அவை 17 பார்சல்களில் நிரம்பியுள்ளன. மேலும் அங்கு நான்கு சந்தேக நபர்களும் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 38, 42 மற்றும் 43 வயதுடைய கற்பிட்டி மற்றும் கந்தக்குளிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த பிடி இலைகளை மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, இதன் மூலம் கடல் முழுவதும் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கிறது. தொடர்ச்சியான விழிப்புணர்வு காரணமாக கடல் மோசடியில் ஈடுபடுவோர் மற்றும் கடல் கடத்தலில் ஈடுபடுவோரை கடற்படையால் கைது செய்ய முடிந்தது. இந்த ஆண்டு இதுவரை மட்டும் நாட்டிற்குள் பீடி இலைகளை கடத்த முயன்ற 82 சந்தர்ப்பங்களில் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 55 டன்களுக்கும் அதிகமான பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.