தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் இன்று (ஆகஸ்ட் 30) திருகோணமலை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்கள் திருகோணமலை கோகிலாய் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் போரின்போது கிழக்கு கடற்படைத் கட்டளை மூலம் கைது செய்யப்பட்டனர். அங்கு அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு, ஒரு தடைசெய்யப்பட்ட வலை மற்றும் சில மீன்பிடிபொருட்கள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டன. டிங்கி படகு, வலை மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கடந்த சில நாட்களாக சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கடற்படை கைப்பற்றியுள்ளது. இது மூலம் கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கும் எதிர்கால தலைமுறையினருக்கு மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்கப்படும் என்று கடற்படை நம்புகிறது.