வடக்கு மாகாணத்தில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான நிவாரண பணிகள் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுப்பு
 

அண்மையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் தீவிரமாக கடற்படையினர் செயற்பட்டுவருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரதான அடிப்படை தேவையான சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான உதவிகளை மற்றும் வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணிகளில் கடற்படை நிவாரண அணியினர் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதிகளை மேற்கொள்ளும் வகையில் 58 கிணறுகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடும் அதேவேளையில், கடற்படையினர் சுமார் 3000 லீட்டர் சுத்தமான குடிநீரை இம்மக்களுக்கு வழங்கியுள்ளனர்.