வெற்றிகரமான விஜயத்தின் பின் ரஷியன் கடற்படைக் கப்பல் தாயாகம் திரும்பின
 

கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ரஷியன் கடற்படையின் பெரேகொப் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (ஏப்ரல் 22) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது. அங்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்களை அனுப்பிவைத்தனர்.

ஐந்து (05) நாட்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு வந்தடைந்துள்ள குறித்த கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொன்டனர்.