ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் தென் கடற்படை கட்டளை அதிகாரியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட் 21) இலங்கைக்கு வந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் “அமகிரி”கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் தென் கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அடமிரல் நிஷாநத உலுகேதென்ன அவர்களை தென் கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

2 வது பாதுகாப்பு பிரிவின் தளபதி கேப்டன் கோஜி சய்டோ மற்றும் இக் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமான்டர் மிசியகி மொரி ஆகியோர் தென் கடற்படை கட்டளை அதிகாரியை சந்தித்துள்ளனர். மேலும் இன் நிகழ்வுக்காக இலங்கையில் ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் அட்சுஹிரோ மொரொரே அவர்களும் கழந்துகொன்டனர். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.