சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (ஆகஸ்ட் 09) காலை சட்டவிரோதமான வலைகள் மற்றும் வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 மினவர்கள் நச்சிகுடா கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய 03 படகுகள், 05 சட்டவிரோத வலைகள், 17 வெடிதூண்டிகள், 17 வெடி நூல் துண்டுகள், 08 நிர் முழ்கி முகமூடிகள், 08 நிர் முழ்கி காலனிகள் மற்றும் 03 ஜிபிஎஸ் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெடித்தலதீவு கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.