சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (29) இரனதீவுக்கு தெற்கு பகுதி கடலில் சட்டவிரோதமான வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 மினவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் கைது செய்யப்பட்டுள்ளன.

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய சட்டவிரோத 11 வலைகள், 11 ஜோடி நிர் முழ்கி காலனிகள், 11 நிர் முழ்கி முகமூடிகள், 02 ஜிபிஎஸ் இயந்திரங்கள் மற்றும் பிடிக்கபட்டுள்ள 29 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி கடற்றொழில் வளங்கள் நிர்வகித்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.