பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை
 

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவைக்கும் நோக்கில்பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” இன்று (மே, 30) கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலின் கட்டளை தளபதி கெப்டன் பைசல் ஜாவீட்உட்பட 3 மருத்துவ நிபுணர்கள் குழுக்களுடன் 46 கடற்படை அதிகாரிகள் மற்றும் 241 கடற்படை வீரர்களும் வருகை தந்துள்ளனர். இதன்போது நிவாரணப் பொருட்களாகஉலர் உணவுகள், மருந்து வகைகள் மற்றும் குடிநீர் போத்தல்கள் என்பனஇக்கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும்நோக்குடன் இலங்கைக்கு இரண்டாவது தடவையாக நிவாரணப் பொருட்களுடன் வருகைதந்தகுறித்த கப்பல் இம்மாதம் 4ம் திகதி நல்லென்ன விஜெஜமொன்ரை மேற்கொண்டுகொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அதிமேதகு வைத்திய கலாநிதி சர்ப்ராஸ்அஹமத் கான் சிப்ரா, கடற்படையின் மேற்கு பிராந்திய கட்டளை தளபதி, கடற்படைதலையமையக அதிகாரிகள் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.