சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.
 

வடக்கு கடற்படை கட்டளை மன்டதீவு கடற்படை கப்பல் வேலுசுமனவின் வீரர்களால் நேற்று (26) சிருதீவுக்கு நெருங்கிய கடல் பிரதேசத்தில் தனியிலை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒரு வல்லம் மற்றும் 23 தனியிலை வலைகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. அத்துடன் குறித்த சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்டதீவு கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.