காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ந்து ஏழாவது முரயாக ஏற்பாடு செய்துள்ள காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாடு இன்று(28) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் ஆரம்பமானது. மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தல் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த ஆண்டு மாநாட்டுக்கு 41 நாடுகளில் 12 சர்வதேச நிறுவனங்களிள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் 7 பேர் உட்பட 130 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முதல் நாள் மாநாடு அமர்வில் தலைமை விருந்தினராக இராணுவத் தளபதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, வெளி விவகார பிரதி அமைச்சர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை ஏர் சீப் மார்ஷல் கோலித குணதிலக, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் கிரிஷாந்த த சில்வா, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுன்தர,ஆகும் அவர்கள்,தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரசாங்கத்தில் ஆயுதப்படைகளிள் உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் வரவேற்புரை நிகழ்த்தின கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் காலி கலந்துரையாடலுக்கு வந்த அனைவரையும் இதயங்கனிந்த வரவேற்பை நல்கினார்,மற்றும் ஏழாவது முரயாக ஏற்பாடு செய்துள்ள இப் மாநாட்டின் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு தமது கெளரவமான நன்றியை தெரிவித்தார். வெற்றிகரமாக மாநாட்டு ஏற்பாடு செய்ய பாதுகாப்பு அமைச்சு மேற்கொள்ளப்பட்ட கையேடு குறித்துப் பெரிதும் நன்றி கூறினார்.

மேலும் பேசிய அவர் இன்றே முதலீட்டாளர்களுக்கு பரஸ்பர உறவுகளை கட்டமைக்க காலி உரையாடல் ஒரு நல்ல விளைநிலமாக இருக்கிறது என்று கூறினார். மற்றும் ஒரு சிறந்த ஒத்துழைப்பு உருவாக்க நாம், எமது பங்குதாரர்கள் நம்ப வேண்டும் என்றும் அது மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மைக வலுப்படுத்தை உருவாக்கும் என்று அவர் வலியுறுத்தினார்

வலுவான கடல்சார் இணைப்புகளை கட்டி, பிராந்திய அமைதி அதிகரிக்க முடியும் என்றும், கடல் பொருள் துறை சார்ந்திருத்தல், வர்த்தக மற்றும் ஆற்றல் அகும் குறிப்புகளை மூலம் தொடர்ந்து வளரும் என்று நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன் பின்னர் கருத்தரங்கில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன அவரது உரையில் பூகோள மூலோபாய சமநிலை தற்போது முன்பை விட கடல் நோக்கி கவனம் செலுத்தி இருக்கும் இந்த காலத்தில், இந்தியப் பெருங்கடல் பகுதி உலக பொருளாதார ஸ்திரத்தன்மையை தாக்கத்தை இருக்க முடியும் மண்டலமாக மாறிவிட்டதாக கூறினார். கடந்த சில தசாப்தங்களில் ஆசியாவை நோக்கி உலக பொருளாதாரம் கவனம்செலுத்த பின் இந்தியப் பெருங்கடல் பகுதியில் முக்கியத்துவம் மேலும் உயர்த்தி காட்டுகிறது மற்றும் இந்த கடல் மண்டலம் ஊடாக உலக வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவை விரைவான முன்னேற்றமும், வளர்ச்சியும் உள்ளன. மற்றும் உண்மைகளை அடிப்படையாக பெருங்கடல் மண்டலம் நோக்கி பிராந்திய சக்திகளின் கவனம் செலுத்தி இருக்கும் கடல் மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் உலக பொருளாதார ஸ்திரத்தன்மையை தாக்கத்தை இருக்க முடியும் என்று கூறினார்.

அதன்படி, இன்று (28) நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற வெளிநாட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் மூலம் பல விரிவுரைகள் மற்றும் கருத்துக்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு நிறுவுவதில் முக்கியமான பிரச்சினைகள் பல பகிர்ந்து கொள்ள முடிந்தது. காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாட்டில் முதல் நாள் பிரமாண்டமாக மற்றும் வெற்றிகரமாக முடிவுற்றது.