சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 16 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 16 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 28 திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 13 தலைமன்னார் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘தம்மென்னா’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் 03 படகும் தடைசெய்யப்பட்ட 34 மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

அதேதினம் நச்சிகுடா ‘புவனெக’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் சலைபாடு கடளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலையுடன் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் கிலினொச்சி கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.